சென்னை, ஏப்.17- மருத்துவ, வாகன காப்பீடுகளுக்கான பிரீமி யம் தொகையை செலுத்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. காப்பீட்டு பிரீமியர் தொகையை மே 15ஆம் தேதி வரை செலுத்தலாம் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.
மார்ச் 25 முதல் மே 3 வரை காப்பீடு தொகை செலுத்த வேண்டியவர்களுக்கு அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.